பிரித்தானியாவில் காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு மாஸ்க் அணிய ஆலோசனை

Published on: 03 Dec 2025, 08:18 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தொற்றுகள் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி (UKHSA) வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு மாஸ்க் அணிய  ஆலோசனை

பிரித்தானியா முழுவதும் இன்ஃப்ளூயென்சா (ப்ளூ காய்ச்சல்) உட்பட பல்வேறு குளிர்கால வைரஸ்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில், தொற்றுகள் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி (UKHSA) வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு மரபணு மாற்றம் பெற்ற இன்ஃப்ளூயென்சா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதால், மருத்துவ நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு, UKHSA பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது:

அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் நீரால் கழுவுதல்

தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை அல்லது டிஸ்யூ காகிதத்தால் மூக்கு மற்றும் வாயை மூடுதல்

வீட்டில் நபர்கள் அதிகமாக கூடும்போது ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்தல்

உடல்நிலை மோசமாக இருந்தால், வீட்டிலேயே ஓய்வெடுத்தல்

வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், மாஸ்க் அணிதல்

இந்த பரிந்துரைகள், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படக்கூடிய பாதிக்கப்படுவோரை (elderly, immunocompromised) பாதுகாக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியர்கள் இந்த எளிய நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், குளிர்கால தொற்றுகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW