இவர்தான் என் குழந்தைக்கு தந்தை - இலங்கை கிரிக்கெட் வீரர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இளம் பெண்

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்கா கருணாரத்தின மீது, ஒரு பெண் தனது இரண்டு மாத குழந்தையின் தந்தை அவர் தான் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

Published on: 26 Nov 2025, 07:59 pm
33

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
இவர்தான் என் குழந்தைக்கு தந்தை - இலங்கை கிரிக்கெட் வீரர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இளம் பெண்

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்கா கருணாரத்தின மீது, ஒரு பெண் தனது இரண்டு மாத குழந்தையின் தந்தை அவர் தான் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

29 வயதான சமிக்கா கருணாரத்தின, 2019 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். 2022 இல், ஐசிசி விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு அபராதத்துடன் ஒரு வருட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் மீண்டும் ஒரு தனிப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சமிக்கா தான் தனது குழந்தையின் உயிர்த் தந்தை என்றும், ஆனால் அவர் அதனை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகிய அந்த பெண், சமிக்கா உடல்நலக் காரணங்களால் வர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.

அவர் மேலும்,
“இந்தக் குழந்தையின் தந்தை சமிக்கா கருணாரத்தின என்பதில் எனக்கு உறுதி உள்ளது. அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் நீதிமன்றத்தில் வந்துள்ளேன். குழந்தை இலங்கையில் பாதுகாப்பாக வாழ வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமிக்கா கருணாரத்தினவோ அல்லது இலங்கை கிரிக்கெட் வாரியமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW