தந்தை மரணத்தால் நாடு திரும்பினார் இலங்கை வீரர் துனித் வெல்லலகே
தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே இன்று (19) காலை நாடு திரும்பினார்.
இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது துனித் வெல்லலகேயுடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் வந்துள்ளார்.