இலங்கையின் இந்திய கோடீஸ்வரரின் ஆடம்பர திருமணம்
இந்திய தொழில் அதிபர் மோகன் சுரேஷின் மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணம் இலங்கையில் நடைபெற இருப்பது, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
இந்திய தொழில் அதிபர் மோகன் சுரேஷின் மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணம் இலங்கையில் நடைபெற இருப்பது, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
வரும் 23ஆம் தேதி பெந்தோட்டை பகுதியில் உள்ள Cinnamon Bentota Beach ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த உயர்நிலை திருமண நிகழ்வில், இந்தியாவில் இருந்து சுமார் 300 விருந்தினர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவால் மட்டும் இலங்கைக்கு சுமார் 35 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக செலவில் நடைபெறும் இத்தகைய சர்வதேச திருமணங்கள், இலங்கை உலகளாவிய அளவில் “ஆடம்பர திருமணங்களுக்கு சிறந்த தளம்” என்ற அடையாளத்தை வலுப்படுத்த உதவும் எனும் கருத்தும் முன்னெடுக்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா சந்தையில் மீண்டும் முன்னிலை பெற இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
Editorial Staff