இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை – நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று (மே 29) பதிவான இந்த உயர்வு, நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை – நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி

இலங்கையில் தங்க விலை இன்று (மே 29) மீண்டும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு நகை வாங்குவோருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கத்தின் வெளியீட்டின்படி, நேற்று (மே 28) 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 4,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு நேற்று 352,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 3,600 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை நிர்ணயத்தின்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும் உள்ளது. தினசரி விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்படும் தங்கச் சந்தையில், தொடர்ச்சியான அதிகரிப்பு நுகர்வோரின் வாங்கும் திறனைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர