நினைத்ததை சாதிக்கணுமா? இந்த 2 விஷயங்கள் இருந்தா போதும்...!
வாழ்க்கையில் உயர வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற கனவு பலருக்கு இருந்தாலும், பாதி வழியிலேயே முயற்சியைக் கைவிடுவது இயற்கையாகிவிட்டது. ஆனால், வெற்றியின் உச்சத்தைத் தொடுவதற்கு வெறும் இரண்டு ஆயுதங்கள் மட்டுமே போதுமானவை என்கின்றனர் வாழ்க்கைப் பயிற்சியாளர்கள்.
முதலாவது, ஒருவர் தனது குறைகளையும் நிறைகளையும் உணர்ந்து கொள்வது. மனிதர்களாகப் பிறந்த அனைவரிடமும் குறைகள் (Flaws) இயற்கையாகவே இருக்கும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் இந்தக் குறைகளும் நிறைகளும் மாறுபடும்.

ஆனால், தனது பலவீனம் எது, பலம் எது என்பதை ஒருவர் அறிந்து, குறைகளைக் களைந்து மேலும் தன்னை மெருகேற்றிக் கொள்வதே அடிப்படை புத்திசாலித்தனம். இந்தச் சுய பரிசோதனைக்கு, நண்பர்கள் அல்லது புரிந்துகொள்ளும் குடும்பத்தினரின் விமர்சனங்களைத் துணிச்சலுடன் கேட்க வேண்டும்.
இரண்டாவது ஆயுதம், மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும் அணையா நம்பிக்கை. "எத்தனை முறை கீழே விழுந்தாலும், நான் நினைக்கும் வரை தோற்க மாட்டேன்" என்ற உள் உணர்வு, நாளடைவில் பெரும் தன்னம்பிக்கையாக மாறி, தொடர் ஊக்கத்தைக் கொடுக்கும். இந்தத் தன்னம்பிக்கையும், நேர்மறை எண்ணமும் ஒருவரிடம் குடிகொண்டு விட்டால், எவ்வளவு பெரிய இலக்கையும் எளிதாக அடைய முடியும்.
அத்துடன், தொடர் முயற்சியையும் வெற்றிக்கான பயிற்சியையும் கைகோர்த்துச் சென்றால், சாதாரண மனிதனும் சாதனையாளனாக மாறுவது தவிர்க்க முடியாதது. எனவே, சோர்வடையாமல், இன்று முதல் உங்கள் மீதான நம்பிக்கையை விதைக்கத் தொடங்குங்கள்.