சூர்யாவுக்குத் தெரியாமல் கள்ளக்காதல் – ஜோதிகாவின் சிஸ்டம் காட்சியால் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவைத் திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆன பிறகு, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் நடித்து OTT தளத்தில் வெளியான `சிஸ்டம்’ (System) என்ற படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், ஜோதிகா தனது கணவருக்குத் தெரியாமல் கள்ள உறவில் ஈடுபடுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாகவும், இதுவே தமிழ் ரசிகர்களின் கடுமையான எதிர்வினைக்குக் காரணமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய சினிமாவின் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து, தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் ஒதுங்கியிருந்தார்.
தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வரும் அவரது இந்தப் புதிய படத்தின் மேற்படி காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி, சூர்யா மனைவி இப்படி நடிப்பது சரியில்லை’ என்ற ரீதியில் ரசிகர்கள் கருத்துக்களைக் கொட்டி வருகின்றனர்.
சிலர்,இது வெறும் நடிப்புதான்; கதாபாத்திரத்திற்காக நடித்துள்ளார்’ என்று ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். எனினும், இந்தச் சர்ச்சை OTT படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது மட்டும் நிச்சயம்.