கோடையில் குளோயிங் ஸ்கின் வேண்டுமா? இயற்கையான பளபளப்பு தரும் பப்பாளி ஃபேஸ்!

Published on: 22 Mar 2026, 05:49 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கோடைக்கால வெயிலால் சருமம் கருமையாகாமல் காப்பதற்கு பப்பாளி சிறந்த தீர்வு. இயற்கையான ஃபேஸ் பேக்குகள் மூலம் முகத்தில் பளபளப்பை எளிதாக பெறலாம்.

கோடையில் குளோயிங் ஸ்கின் வேண்டுமா? இயற்கையான பளபளப்பு தரும் பப்பாளி ஃபேஸ்!

கோடைக்காலத்தில் அதிகமான வெயில் தாக்கம் சருமத்தின் இயல்பை மாற்றும் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக சூரியனின் புற ஊதாக்கதிர்கள் முகத்தின் நிறத்தை கருமையாக்கி, சோர்வாக தோன்றச் செய்கின்றன.

இந்த நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு தினசரி பராமரிப்பு அவசியமாகிறது. மாய்ஸ்சுரைசர், சன் ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

அந்த வகையில், அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும் பப்பாளி, சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். இதில் உள்ள என்சைம்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக உதவுகின்றன.

பப்பாளியை தேன், எலுமிச்சை, திராட்சை சாறு, மஞ்சள் போன்ற பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும்போது, முகத்தில் இருக்கும் கருமை மெல்ல மாறி, இயற்கையான பிரகாசம் அதிகரிக்கும்.

மேலும் கடலை மாவு, தயிர் சேர்த்து தயாரிக்கும் பப்பாளி பேக், சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, மிருதுவாக மாற்றும். கற்றாழை சேர்த்து பயன்படுத்தும் போது, குளிர்ச்சி தருவதுடன் ஈரப்பதத்தையும் பாதுகாக்கும்.

அதேபோல் தக்காளி சாறு கலந்து பயன்படுத்தும் ஃபேஸ் பேக், சூரிய ஒளி தாக்கத்தால் ஏற்பட்ட நிறமாற்றத்தை குறைக்க உதவும். இந்த இயற்கை முறைகள் வாரத்திற்கு 3 முதல் 4 முறை தொடர்ந்து செய்தால், மாற்றம் தெளிவாக உணர முடியும்.

மொத்தத்தில், ரசாயன பொருட்களைத் தவிர்த்து இயற்கை முறையில் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. சரியான முறையில் பயன்படுத்தினால், கோடைக்காலத்திலும் முகம் பளிச்சென்று பிரகாசமாகத் திகழும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW