இலங்கையில் பெண் ஓட்டல் ஊழியருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாலியல் தொந்தரவு.. அதிர்ச்சி சம்பவம்..!

Published on: 08 Mar 2026, 01:00 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர் அலீம் தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதே சமயம், அவர் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் கேப்டன் அலி ஆகா ஆகியோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையில் பெண் ஓட்டல் ஊழியருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாலியல் தொந்தரவு.. அதிர்ச்சி சம்பவம்..!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர் அலீம் தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதே சமயம், அவர் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் கேப்டன் அலி ஆகா ஆகியோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இச்செயல் பாகிஸ்தான் அணியை இன்னும் ஒரு நெருக்கடி நிலைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற சூப்பர்-8 சுற்றின் போது பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மோதியது. அந்த ஆட்டம் கண்டியில் நடைபெற்றது.

அதற்குமுன் பாகிஸ்தான் அணி “கோல்டன் கிரவுண்” ஹோட்டலில் தங்கி இருந்தபோது, அங்கு உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹோட்டல் பெண் ஊழியரை திடீரென தவறான முறையில் தொந்தரவு செய்ததாக டெலிகாம் ஏசியா ஸ்போர்ட் செய்தி தெரிவித்துள்ளது. பெண் ஊழியர் அறை சுத்தம் செய்வதற்காக உள்ளே சென்றபோது, அவர் பயந்துவிட மற்றும் உதவிக்காக சத்தம் போட்ட நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் வீரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருந்தது. எனினும், பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவைட் சீமா வீரர் செயலுக்கு மன்னிப்பு கோரியதால் ஹோட்டல் நிர்வாகம் மேலதிக நடவடிக்கையை எடுத்தவில்லை. அதே நேரத்தில், அணி நிர்வாகம் சம்பந்தப்பட்ட வீரருக்கு அபராதம் விதித்து, நாடு திரும்பியவுடன் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட வீரருக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வீரர் யார் என்பதைக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

20வது உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறியதோடு, ஒழுங்கீன செயல்களில் சிக்கியதால் சர்வதேச அளவில் அவமதிப்பை சந்தித்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணத்தின் போது ஹைதர் அலி மீது இளம்பெண் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். அதே போல, மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் உதவியாளர் மலான் அலி ஒருவரின் மீதான பெண் ஹோட்டல் ஊழியரை சார்ந்த சில்மிஷ சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW