மீனாவுக்கு மிரட்டல் விடுத்த ரோகிணி… உண்மையை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கும் முத்து – சிறகடிக்க ஆசை அப்டேட்

Siragadikka Aasai சீரியலில் தற்போது குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் புதிய திருப்பத்தை எடுத்து வருகிறது. வீட்டில் ஏற்பட்ட சண்டையால் Meenaவை Vijaya வீட்டை விட்டு வெளியேற்றியதால், மீனா தற்போது தனது அம்மா வீட்டில் தங்கி வருகிறார்.
மீனாவுக்கு மிரட்டல் விடுத்த ரோகிணி… உண்மையை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கும் முத்து – சிறகடிக்க ஆசை அப்டேட்

Siragadikka Aasai சீரியலில் தற்போது குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் புதிய திருப்பத்தை எடுத்து வருகிறது. வீட்டில் ஏற்பட்ட சண்டையால் Meenaவை Vijaya வீட்டை விட்டு வெளியேற்றியதால், மீனா தற்போது தனது அம்மா வீட்டில் தங்கி வருகிறார்.

இந்த நிலையில், மீனாவை சந்திக்க Shruthi அவரது பூக்கடைக்கு செல்கிறார். அப்போது வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் Rohini தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஸ்ருதி வெளிப்படுத்துகிறார். அவர்கள் இருவரும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, ரோகிணி காரில் அங்கு வருகிறார்.

மீனா மற்றும் ஸ்ருதியை நேரில் சந்திக்கும் ரோகிணி, இப்போது நாம மூவருமே அந்த வீட்டில் இல்லாத நிலை வந்துவிட்டது என்று கிண்டலாக பேசுகிறார். அதற்கு பதிலளிக்கும் மீனா, இப்போது உனக்கு சந்தோஷமா என்று கேட்கிறார். மேலும் கணவரை பிரிந்து இருப்பதன் வலி என்ன என்பதை இப்போது புரிந்திருக்கும் என கூறுகிறார். அதற்கு பதிலாக, தாங்கள் விரும்பினால் எளிதாக மீண்டும் அந்த வீட்டுக்குள் செல்ல முடியும் ஆனால் மீனாவால் மீண்டும் அந்த வீட்டுக்குள் வர முடியாது என ரோகிணி சவால்விடுகிறார். மேலும் தங்களுக்கு ஆதரவு அளித்தால் நல்லது, இல்லையெனில் விளைவுகள் வேறு இருக்கும் என்றபடி மிரட்டும் விதமாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

மறுபுறம் வீட்டில் மருமகள்கள் யாரும் இல்லாததால் Muthu மற்றும் Ravi இருவரும் வீட்டு வேலைகளை செய்து வருகின்றனர். ரவி சமையலை கவனிக்க, முத்து வீட்டை சுத்தம் செய்கிறார். ஆனால் Manoj எந்த வேலையும் செய்யாமல் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்த முத்து அவரை கண்டிக்கிறார். பின்னர் Vijaya வந்து மனோஜ் எந்த வேலைக்கும் போக மாட்டான் என கூற, அவனை இப்படி கெடுக்கிறதே நீங்கள்தான் என்று முத்து மற்றும் ரவி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து வீட்டுப் பணிக்காக தனியாக வேலைக்காரரை நியமிக்க முடிவு செய்கிறார்கள்.

இதே நேரத்தில், Annamalai விஜயாவிடம் தனியாக பேசுகிறார். அப்போது மீனா தான் இந்த வீட்டின் முதுகெலும்பு என கூறும் அவர், மீனா போன்ற நல்ல மருமகள் இனி கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார். மீனாவை மீண்டும் வீட்டுக்கு அழைக்கலாம் என அண்ணாமலை கூற, அதற்கு விஜயா கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, சிலர் ஒருபோதும் மாற மாட்டார்கள் என்று மறைமுகமாக விஜயாவை குற்றம்சாட்டுகிறார்.

மற்றொரு பக்கம், முத்து மீனாவின் பூக்கடைக்கு சென்று அவரை சந்திக்கிறார். அப்போது ரோகிணி வந்து மிரட்டிய விஷயத்தை மீனா தெரிவிக்கிறார். மேலும் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு ரோகிணி தான் காரணமாக இருக்கலாம் என்று ஸ்ருதி சந்தேகப்படுவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்ட முத்து, முதலில் அந்த பெண் சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி, இந்த விஷயத்தின் உண்மையை அறிய விசாரணையில் இறங்க முடிவு செய்கிறார்.

இவ்வாறு சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முத்துவின் விசாரணை மூலம் உண்மை வெளிவருமா என்பது அடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர