பிக்பாஸ் வீட்டில் மீண்டும் விதிமீறல்! நீச்சல் குளத்தில் மைக் கழட்டி பேசிய பார்வதியும் கமருதீனும் – ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

Published on: 22 Dec 2025, 06:37 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இந்த சீசனின் காதல் புறாக்களாக உருவெடுத்துள்ள பார்வதி மற்றும் கமருதீன், கடந்த வாரம் மைக்கை மறைத்துப் பேசியதற்காக ஹோஸ்ட் விஜய் சேதுபதியிடம் கடுமையான எச்சரிக்கை பெற்றிருந்தனர். இருப்பினும், இந்த வாரம் அவர்கள் மீண்டும் பிக்பாஸ் விதிகளை மீறி விட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் விதிமீறல்! நீச்சல் குளத்தில் மைக் கழட்டி பேசிய பார்வதியும் கமருதீனும் – ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்துடன் 11 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்த வாரம் ஃபேமிலி ரவுண்ட் என்பதால், போட்டியாளர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரங்களில் ஏற்பட்ட பார்வதி–கமருதீன் இணையின் விதிமீறல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சீசனின் காதல் புறாக்களாக உருவெடுத்துள்ள பார்வதி மற்றும் கமருதீன், கடந்த வாரம் மைக்கை மறைத்துப் பேசியதற்காக ஹோஸ்ட் விஜய் சேதுபதியிடம் கடுமையான எச்சரிக்கை பெற்றிருந்தனர். இருப்பினும், இந்த வாரம் அவர்கள் மீண்டும் பிக்பாஸ் விதிகளை மீறி விட்டனர்.

சமீபத்தில், பார்வதி–கமருதீன் ஜோடி நீச்சல் குளத்தில் ஒன்றாக குளித்துக் கொண்டிருந்தபோது, மைக்கை கழட்டி வைத்து, மைக் இல்லாமல் தனிப்பேச்சு நடத்தியுள்ளனர். இதை கவனித்த பிக்பாஸ், உடனடியாக அவர்களை மைக்கை மாட்ட அறிவுறுத்தியது. ஆனால் அப்போதே பல முக்கிய உரையாடல்கள் பதிவாகாமல் போய்விட்டதால், இந்த செயல் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

சக ஹவுஸ்மேட்ஸ், இருவரையும் நேரடியாக கடிந்து கொண்டு, “ஏன் இப்படி தொடர்ந்து விதிகளை மீறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். கடந்த வார எச்சரிக்கை போதுமானதாக இருக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும், இந்த இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவர்கள் வெளியே வந்த பின் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், இப்போது அவர்களின் விதிமீறல் நடத்தை அந்த நேர்மறையான எதிர்பார்ப்பையே மங்க வைத்துள்ளது. அடுத்த வாரத்தில் யார் வெளியேறுவர் என்பது மட்டுமல்ல, இந்த விதிமீறலுக்கு பிக்பாஸ் என்ன தண்டனை வழங்குவார் என்பதும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW