வாடகைக்கு வீடு விட்டவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.. சிக்கிய ஜோடி

சென்னை நெற்குன்றம் சக்தி நகரில். 40 வயதான கார்த்திகேயன் என்பவர், தனது இரு மாடி வீட்டின் தரைத்தளத்தில் ‘டிஷ்யூ’ பேப்பர் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார்.

வாடகைக்கு வீடு விட்டவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.. சிக்கிய ஜோடி

சென்னையில் வாடகைக்கு வீடு விடுபவர்களுக்கு பெரிய எச்சரிக்கை சமிக்ஞையாக அமைந்துள்ளது சமீபத்திய ஒரு திருட்டு சம்பவம். வீட்டு உரிமையாளர் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வாடகைக்காரரான ஆட்டோ டிரைவரும், அவரது தோழியும் சேர்ந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது சென்னை நெற்குன்றம் சக்தி நகரில். 40 வயதான கார்த்திகேயன் என்பவர், தனது இரு மாடி வீட்டின் தரைத்தளத்தில் ‘டிஷ்யூ’ பேப்பர் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். முதல் மாடியில் ஆட்டோ டிரைவரான 25 வயது நிதீஷ்குமார் வாடகைக்கு வசித்து வந்தார்.

டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் அன்று, கார்த்திகேயன் வீட்டை பூட்டி, சாவியை ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்றார். அவர் திரும்பி வந்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் வெளிநாட்டு பணம் மாயமாகியிருந்தது. வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால், “தெரிந்தவர்களே திருடி இருக்கலாம்” என்ற சந்தேகம் எழுந்தது.

கார்த்திகேயன் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாடகைக்காரர் நிதீஷ்குமார் மற்றும் அவரது 21 வயது தோழி சிநேகா சம்பத்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்து பணத்தை திருடியது வெளிப்பட்டது.

நிதீஷ்குமார், உரிமையாளர் சாவியை மறைத்த இடத்தை நோட்டமிட்டு, அதை எடுத்து வீட்டிற்குள் நுழைந்து திருட்டு செய்தது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.66,000 ரொக்கம் மற்றும் ரூ.56,000 மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், வாடகை வீடுகளில் சிசிடிவி கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.