யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்! ஆதி குணசேகரனின் பழிவாங்கல் – ஜனனியின் தமிழ் சோறு பிசினஸுக்கு ஆபத்து! | எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி

Published on: 22 Dec 2025, 06:51 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இப்போது ரசிகர்கள் ஒரே கேள்வியில்: இந்த போராட்டத்தில் வெல்வது யார்? ஆதி குணசேகரனின் பழிவாங்கும் போக்கா? அல்லது ஜனனியின் தைரியமா? அடுத்த எபிசோடுகள் தான் பதில் சொல்லும் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்! ஆதி குணசேகரனின் பழிவாங்கல் – ஜனனியின் தமிழ் சோறு பிசினஸுக்கு ஆபத்து! | எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி

“எதிர்நீச்சல்” சீரியல் தொடர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தர்ஷன்–பார்கவி திருமண சதி, ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோ, சக்தி கடத்தப்பட்ட சம்பவம், ஆதி குணசேகரனின் தலைமறைவு என பல ட்விஸ்டுகள் வந்த பின்னரும், கதைக்களம் இப்போது முற்றிலும் வேறு திசையில் திரும்பியுள்ளது.

ஜனனி தனது தமிழ் சோறு பிசினஸை தொடங்க தீர்மானித்துள்ளார். ஆனால், தலைமறைவாக இருந்தாலும், ஆதி குணசேகரன் இதை எப்படியும் தடுக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறார். அவர், கதிர் மூலம் தயாரிக்கப்பட்ட ரெளடி கும்பலுக்கு விரிவான திட்டத்தை வழங்கி, “இனி அவளுகளால் ஒரு மண்ணும் திறக்க முடியாது” என்றும், “இந்த திறப்பு விழா, இறப்பு விழாவாக மாறும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைக் கேட்ட கரிகாலன், கதிர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தாலும், ஞானம் பயத்துடன் இருக்கிறார். ஆதி குணசேகரனின் ஆட்கள் ஏற்கனவே மதுரைக்கு புறப்பட்டுவிட்டனர் என்பது ஜனனிக்கு ஆபத்தை முன்கூட்டியே குறிக்கிறது.

மறுபுறம், ஜனனியின் நலனை நினைத்து கொற்றவை அவரை எச்சரிக்கிறார். “நாளைக்கு கடை திறக்கும்போது லோக்கல் ஸ்டேஷனிலிருந்து போலீஸ் பாதுகாப்பு கேட்டுக்கோங்க. எல்லாம் உங்க நல்லதுக்குதான்” என்று வலியுறுத்திய கொற்றவைக்கு பதிலாக, ஜனனி தைரியமாக “போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்” என மறுத்துவிடுகிறார்.

சக்தியும் கவலையுடன் இருக்கிறார். “நான் கடத்தப்பட்டு, அடிக்கப்பட்டேன். அப்படி ஒரு நிலையில் இருக்கையில், நீங்க ஒரு பிசினஸ் தொடங்க போறீங்க. ஆதி சும்மா விடுவாரா?” என ஜனனியிடம் கேட்கிறார். ஆனால் ஜனனி உறுதியாக, “நம்ம மொத்தமா அழிஞ்சாலும் பரவாயில்ல. இந்த வாட்டி அவரை விடக்கூடாது. நம்ம பிசினஸை நடத்தியே ஆகணும்” என பதிலளிக்கிறார்.

இப்போது ரசிகர்கள் ஒரே கேள்வியில்: இந்த போராட்டத்தில் வெல்வது யார்? ஆதி குணசேகரனின் பழிவாங்கும் போக்கா? அல்லது ஜனனியின் தைரியமா? அடுத்த எபிசோடுகள் தான் பதில் சொல்லும் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW