மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் எரித்துக்கொன்ற கிராமத்தினர்
ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பம் மாவட்டம், சாய்பசா கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் மக்கள் மனதை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 வயதான கொல்ஹன் சிங், இரண்டு மனைவிகள் கொண்டவர். இரண்டாவது மனைவி 32 வயதான ஜோதி சிங், 2 வயது மகனும், 2 மாத ஆண் குழந்தையும் உடையவர்.
கிராமத்தினர் ஜோதி சிங்கு மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். இதனால், கடந்த 17ம் தேதி இரவு, கொல்ஹன் சிங்கு வீட்டிற்கு 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வந்தனர். அவர்களுக்கும் கொல்ஹன் சிங்குவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கிராமத்தினர் பெட்ரோலை கொண்டு ஜோதி சிங்குவையும் அவரது 2 மாத குழந்தையையும் தீ வைத்து கொன்றனர்.
இந்த சம்பவத்தில் கொல்ஹன் சிங்கு சிறிய காயங்களுடன் உயிர் தப்பி ஓடியுள்ளார். பின்னர், இரவு நேரத்தில் போலீஸ் நிலையம் பூட்டப்பட்டதால் அவர் அங்கே தங்கியிருந்தார். அதிகாலை போலீஸ் நிலையம் திறக்கப்பட்ட உடன், சம்பவத்தை போலீசாருக்கு தெரிவித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.
போலீசார் சாய்பசா கிராமம் சென்ற போது, ஜோதி சிங்குவும் அவரது 2 மாத குழந்தையும் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கண்டனர். இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவ தொடர்பாக கிராமத்தினர் 4 பேரை கைது செய்துள்ளனர் மற்றும் விசாரணை நடக்கிறது.
இந்த நிகழ்வு, மூடநம்பிக்கையின் தாக்கம் எவ்வளவு தீங்கானதாகும் என்பதையும், சமூகத்தில் புரட்சிகரமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
