மின்விசிறியால் ஏற்பட்ட சண்டை... தாய் எடுத்த விபரீத முடிவு; தவிக்கும் குழந்தைகள்

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நிஷாந்தியின் மூத்த மகள், தன் பாட்டியான (கணவரின் தாய்) அறையில் உறங்கச் சென்றாள்.  
மின்விசிறியால் ஏற்பட்ட சண்டை... தாய் எடுத்த விபரீத முடிவு; தவிக்கும் குழந்தைகள்

வத்தளை, ஒலியம்முல்லை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 34 வயதான நிஷாந்தி ருவானி, தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நிஷாந்தியின் மூத்த மகள், தன் பாட்டியான (கணவரின் தாய்) அறையில் உறங்கச் சென்றாள்.  

நிலவும் கடும் வெப்பத்திற்கு மத்தியிலும், பாட்டி மின்விசிறியை முழுவதுமாகத் தன் பக்கமே திருப்பிக்கொண்டு உறங்குவதை நிஷாந்தியால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

வியர்வையில் நனைந்து, சௌகரியமின்றி உறங்கிக்கொண்டிருந்த தன் இளைய மகளுக்கும் சிறிது காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக, மின்விசிறியைத் திருப்பி வைக்குமாறு  கணவரிடம்   மனைவி தொடர்ந்து வலியுறுத்தியது,   அவருக்குக் கடும் கோபத்தை மூட்டியது. 

அதன் விளைவாக, அவர் தன் மனைவியை மிகக் கொடூரமாகத் தாக்கினார்.

தன் குழந்தைக்குக் காற்று வேண்டும் என்று கேட்டதற்காகத் தான் தாக்கப்பட்டதை எண்ணி அதிர்ச்சியும் கடும் ஆவேசமும் அடைந்த அவர், உடனடியாகச் சமையலறைக்கு ஓடிச்சென்று, தன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார்.

தீயில் கருகும் வேதனையிலும், தன்னை மீட்பதற்காக யாரும் அருகில் வரக்கூடாது என்று அவர் உரக்கக் கதறினார். தன் மனைவி தீச்சுவாலைகளுக்குள் சிக்கித் தவித்தபோது, ​​அவளைக் காப்பாற்ற கணவன் முயன்றான்.

ஆனால்,   அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைக்கத் தண்ணீர் ஊற்றியதுடன், காயமடைந்த அந்தக் கணவன்-மனைவி இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கவும் ஏற்பாடு செய்தனர்.  

கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான  தாய்,  உயிரிழந்துள்ளமை  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த மரண விசாரணை நேற்று (08) கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. முகமது அஷ்ரஃப் ரூமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் உயிரிழந்த பெண்ணின் தாயாரும் மாமியாரும் சாட்சியமளித்தனர். தன் மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கணவரின் சாட்சியத்தைப் பதிவு செய்வதை, மே 11-ஆம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர