மத்திய கிழக்கு போர்ப்பிரச்சனை: இலங்கையில் புதன்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப்பிரச்சனையின் தாக்கங்களை எதிர்கொள்வது குறித்து இலங்கையில் இன்று (16) விசேட கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர், அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரசு திணைக்கள பிரதானிகள் கலந்து கொண்டு நிலையை ஆராய்ந்தனர்.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், எதிர்கால எரிபொருள் விநியோக சிக்கல்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிகளை திட்டமிடுவதாக இருந்தது.
கூட்டத்தின் முடிவுகளை அறிய அரசாங்க தகவல் திணைக்களம் மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறியதின்படி, ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமை அரசு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இயங்கும் என அவர் உறுதி செய்தார். மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை வழங்கப்படும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரையால் நிறுத்தப்பட்டிருக்கும். தனியார் துறையினரும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியதாக அறிவுறுத்தப்படுள்ளனர்.
இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் உள்ள போர்ச்சூழலை இலங்கையில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளுக்கு முன்னோடி நடவடிக்கையாக கருதப்படுகிறது.