தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் – அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூருவில் பெண் ஒருவர் தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற சம்பவம் பரபரப்பு. பின்னர் இது சமூக வலைதள ‘ரீல்ஸ்’ எடுக்க செய்த முயற்சி என தெரியவந்தது.
தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் – அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் வருவதை போல ஒரு பெண், தனது தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியர் மூலம் அனுப்ப முயன்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் கர்நாடகாவின் Bengaluru நகரில் உள்ள வயலிகாவை பகுதியில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, ஒரு பெரிய சாக்குமூட்டையை கொண்டு வந்து மங்களூருக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுள்ளார்.

சந்தேகமடைந்த ஊழியர்கள் சாக்குமூட்டையை திறந்து பார்த்தபோது, அதற்குள் வயதான ஒருவர் இருப்பது தெரியவந்தது. அவர் அந்த பெண்ணின் தந்தை என்பதும் பின்னர் உறுதியானது. மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு ஊழியர்கள் தண்ணீர் கொடுத்து உதவினர்.

ஆனால், அந்த பெண் மற்றும் அவருடன் வந்தவர்கள், “மனிதரை கூரியரில் அனுப்ப முடியாது” என்ற ஊழியர்களின் விளக்கத்தையும் பொருட்படுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் நடந்த விசாரணையில், இது உண்மையான முயற்சி அல்ல, சமூக வலைதளங்களில் வைரலாகும் வகையில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க திட்டமிட்டு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டும் நோக்கிலும் இதை செய்ததாக கூறினர்.

இறுதியில், மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களை எச்சரித்து விடுவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் “வைரலாக வேண்டுமென்றால் எதையும் செய்யலாமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர