பன்னீர் அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் தெரியுமா?

Published on: 21 Sep 2025, 03:34 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

உடல்நலத்திற்கு நன்மைகள் தரும் பன்னீர், சைவ உணவுப்பிரியர்களின் விருப்ப உணவாக கருதப்படுகிறது. ஆனால், பன்னீரை அளவுக்கு மீறி சாப்பிடும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். 

பன்னீர் அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் தெரியுமா?

உடல்நலத்திற்கு நன்மைகள் தரும் பன்னீர், சைவ உணவுப்பிரியர்களின் விருப்ப உணவாக கருதப்படுகிறது. ஆனால், பன்னீரை அளவுக்கு மீறி சாப்பிடும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். 

பன்னீர் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த பால் பொருளாகும். இது எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, இதய ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாக உள்ளது.

அதிகப்படியான பன்னீர் சாப்பிட்டால்?

எடை அதிகரிப்பு: பன்னீரில் கலோரி மற்றும் கொழுப்பு குறைவாக இருந்தாலும், அதிகமாக உட்கொண்டால் கலோரி அளவு அதிகரித்து எடை கூடும் அபாயம் உள்ளது.

கொழுப்பு மற்றும் இருதய பிரச்சினை: பன்னீரில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் இருப்பதால், அதை அதிகமாக சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

சிறுநீரக கற்கள்: பன்னீரில் உள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை தரினும், அதிகப்படியான கால்சியம் உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.

பன்னீர் அளவோடு சாப்பிடும் போது எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற உணவுகளுடன் சேர்த்து பன்னீரை உட்கொண்டால் உடல்நலம் காக்கப்படும்.

மொத்தத்தில், பன்னீரை முழுமையாக தவிர்க்க வேண்டியதில்லை, ஆனால் அளவோடு உட்கொள்வதே ஆரோக்கியமான வழிமுறையாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW