சென்னை அணியில் இருந்து 5 முக்கிய வீரர்கள் அதிரடி நீக்கம்: மஞ்சள் சாம்ராஜ்யம் உடைகிறதா?

Published on: 13 Oct 2025, 05:41 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஐ.பி.எல். தொடரின் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம், அடுத்த சீசனுக்கான (IPL 2026) மினி ஏலத்திற்கு முன்னதாக 5 முக்கிய வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது!

சென்னை அணியில் இருந்து 5 முக்கிய வீரர்கள் அதிரடி நீக்கம்: மஞ்சள் சாம்ராஜ்யம் உடைகிறதா?

ஐ.பி.எல். தொடரின் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம், அடுத்த சீசனுக்கான (IPL 2026) மினி ஏலத்திற்கு முன்னதாக 5 முக்கிய வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அலையில் ஆழ்த்தியுள்ளது!

அணியின் சமீபத்திய பலவீனங்களை சரிசெய்யும் நோக்கில், சிஎஸ்கே நிர்வாகம் சில முக்கிய வீரர்களைக் கழற்றிவிட முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அந்தப் பட்டியலில் இருக்கும் முக்கிய வீரர்கள்

டெவோன் கான்வே (Devon Conway) – (முக்கிய வெளிநாட்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்)

சாம் கரன் (Sam Curran) – (ஆல்-ரவுண்டர், முன்னாள் அதிக விலை வீரர்)

தீபக் ஹூடா (Deepak Hooda) – (இந்திய ஆல்-ரவுண்டர்)

விஜய் சங்கர் (Vijay Shankar) – (இந்திய ஆல்-ரவுண்டர்)

ராகுல் திரிபாதி (Rahul Tripathi) – (இந்திய பேட்ஸ்மேன்)

முன்னாள் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் முக்கியப் பங்காற்றிய வெளிநாட்டு நட்சத்திரங்களான கான்வே மற்றும் கரண் ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டியலில் இருப்பது, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாயிருக்கிறது.

ஐ.பி.எல். ஏலத்திற்கான வீரர்களை தக்கவைக்கும் (Retention) காலக்கெடு நவம்பர் 15-க்குள் முடியும் நிலையில், சி.எஸ்.கே.வின் இந்த அதிரடி முடிவு, அணியின் மறுசீரமைப்பைக் குறிக்கிறது.

ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதால், சி.எஸ்.கே. அணியிடம் சுமார் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கையிருப்பில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த மிகப் பெரிய தொகையைக் கொண்டு, மினி ஏலத்தில் சஞ்சு சாம்சன் போன்ற பெரிய வீரர்களை குறிவைத்து வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன!
 
இந்த வதந்திகள் காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் (X) ஒரு சூசகமான பதிலை அளித்துள்ளது. 

“எங்கள் பக்கத்தில் வெளியாகும் வரை எதுவும் அதிகாரப்பூர்வமற்றது” (Nothing’s official till you see it here) என்று குறிப்பிட்டு, இந்தப் பட்டியலில் உள்ள வீரர்களின் நீக்கச் செய்திகளை அதிரடியாக மறுத்து சஸ்பென்ஸை நீட்டித்துள்ளது.

இருப்பினும், அணியின் செயல்திறனை மேம்படுத்த, சி.எஸ்.கே-வில் நிச்சயம் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்!