இறக்குமதி வரி நீட்டிப்பு: வாகன விலை தாறுமாறாக உயர வாய்ப்பு - அதிர்ச்சியில் வாகன சந்தை!
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 50% மேலதிக வரி, எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகள் இலட்சக்கணக்கில் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் வாகனங்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதி தீர்வையில் விதிக்கப்பட்ட 50% மேலதிக வரி நீட்டிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த இந்த 50% மேலதிக வரி விதிப்பை, அரசாங்கம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளது. இந்த வரி நீடிப்புக் காரணமாக, ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலைகள் இலட்சக்கணக்கில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில வாகனங்களின் எதிர்பார்க்கப்படும் விலை அதிகரிப்பு விவரங்கள் வருமாறு:
- சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R): சுமார் 5 இலட்சம் ரூபாய்.
- டொயோட்டா ரைஸ் (Toyota Raize): 10 இலட்சம் ரூபாய்.
- ஹோண்டா வெசல் (Honda Vezel): 15 முதல் 20 இலட்சம் ரூபாய்.
- டொயோட்டா பிராடோ (Toyota Prado): 30 இலட்சம் ரூபாய்.
- லேண்ட் குரூஸர் (Land Cruiser): 50 இலட்சம் ரூபாய்.
- டபுள் கேப் (Double cab): 20 முதல் 25 இலட்சம் ரூபாய்.
இருப்பினும், மே 15 ஆம் தேதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LC) கீழ் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்பதால், தற்போது ஷோரூம்களில் உள்ள பழைய வாகனங்களின் விலையில் மாற்றம் இருக்காது என சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.
எனினும், மே 15 ஆம் திகதிக்குப் பிறகு திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு இந்த உயர்ந்த வரி விதிக்கப்படும், இதுவே சந்தையில் பெரும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அடிக்கடி வரி மாற்றங்களைச் செய்வதைக் காட்டிலும், வரி கொள்கையை மறுசீரமைத்தல், கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை வாகன சந்தையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.