கடுமையான குடியேற்றக் கொள்கை: பிரித்தானியாவில் புலம்பெயர்வு கணிசமாக சரிவு
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு நீண்டகால நிகர புலம்பெயர்வு 204,000 ஆகக் குறைந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு நீண்டகால நிகர புலம்பெயர்வு 204,000 ஆகக் குறைந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு வருடத்திற்கு முன் இருந்த எண்ணிக்கையை விட இது சுமார் மூன்றில் இரண்டு பங்கு குறைவு. அரசாங்கத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.
சட்டப்பூர்வம் மற்றும் சட்டவிரோதம் என இருவகை குடியேற்றமும், கடந்த பத்து ஆண்டுகளாக பிரித்தானிய அரசியலில் முக்கிய விவாதப்பொருளாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கடுமையான விசா நிபந்தனைகள், சம்பள வரம்பு உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
நிகர் புலம்பெயர்வு தரவுகள் கடந்த வாரம் திருத்தப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டபோது, மார்ச் 2023 வரை 12 மாதங்களில் இது 944,000 என்ற உச்சத்தை எட்டியிருந்தது தெரிய வந்தது. இதேவேளை, 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 345,000 ஆகக் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எண்ணிக்கை குறைந்தாலும், குடியேற்றம் இன்னமும் நாட்டின் முக்கிய பிரச்சினையென மக்கள் கருதுகின்றனர்.
பிரான்சிலிருந்து சிறு படகுகளில் வருபவர்கள் இந்த பிரச்சினைக்கு காரணமாகப் பொதுமக்கள் விசாரிப்பதாகவும் பரவலாக கூறப்படுகிறது. இதனிடையே, அரசாங்கம் அகதி அந்தஸ்தை தற்காலிகமாக மாற்றுதல், சட்டவிரோதமாக வருபவர்களை நாடு கடத்தும் செயல்முறையை வேகப்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை இந்த மாதம் அறிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியேறிய நிலை பெறுவதற்கான தகுதி காலத்தை ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தொழிலாளர் குடியேற்றத்தில் முக்கிய பங்காற்றிய முதியோர் காப்பக ஊழியர்களுக்கான விசா வழி ஜூலை மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனால், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த துறையில் குடியேற்ற எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Editorial Staff