ஹோட்டல் அறையில் பாஸுடன் சிக்கிய இளம் பெண் ஊழியர்...போலீசில் புகார் செய்த கணவர்!
உத்தரபிரதேச மின்சாரத் துறையின் EXN உதய் பிரதாப் சிங், முன்னாள் பெண் ஊழியருடன் லக்னோ ஹோட்டலில் தங்கியதாக வைரலான வீடியோவில் பரபரப்பு. பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேச மின்சாரத் துறையின் Executive Engineer (XEN) உதய் பிரதாப் சிங், தனது முன்னாள் பெண் ஊழியருடன் லக்னோவின் கோம்தி நகர் பகுதியில் உள்ள கான்டினென்டல் ஹோட்டலில் தங்கியதாக வைரலான வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவர் உள்ளூர் போலீசாருக்குப் புகார் அளித்ததையடுத்து, கோம்தி நகர் போலீஸ் நிலைய அதிகாரிகள் ஹோட்டலுக்கு விரைந்து சென்று அறையை சோதனையிட்டு, உதய் பிரதாப் சிங் மற்றும் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, இந்த மோதல் நிகழ்வின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் வதந்திகள் பரப்பப்படுவதாகக் கூறி, Executive Engineer உதய் பிரதாப் சிங் தனது பதிலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது.
நான் பாண்டாவில் பணியாற்றிய காலத்தில், அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த இவரை, முக்கியமான அதிகாரப்பூர்வ பதவி உயர்வு பற்றிய விளக்கக்காட்சியில் உதவுவதற்காக லக்னோவிற்கு அழைத்து வந்தேன். இது முற்றிலும் தொழில்முறை சார்ந்த சந்திப்பாகும். தவறான கதையை உருவாக்கவே இந்த வீடியோ பகிரப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தைனிக் பாஸ்கர் செய்தி அறிக்கையின்படி, உதய் பிரதாப் சிங் பாண்டாவில் உள்ள Madhyanchal Vidyut Vitran Nigam அலுவலகத்தில் பணியாற்றியபோது, அந்தப் பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றியுள்ளார். பின்னர் சிங் கோண்டாவிற்கு மாற்றப்பட்டாலும், இருவருக்கும் இடையிலான தொடர்பு தொடர்ந்ததாகவும், லக்னோ ஹோட்டலில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து உத்தரபிரதேச மின்சாரத் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதன் பேரில், உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் லக்னோவிற்கு வருவதற்கான உத்தியோகபூர்வ காரணம் மற்றும் ஹோட்டல் தங்கும் விவரங்கள் குறித்து அரசு தகவல்களைத் திரட்டி வருகிறது. இந்த விசாரணையின் முடிவுகள் அடிப்படையில் மேலும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.