இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்

Published on: 22 Nov 2025, 07:39 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இத்தாலியில் வசித்து வந்த 58 வயது மாலினி யோகராசா என்ற பெண், யாழ்ப்பாணத்தின் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்

இத்தாலியில் வசித்து வந்த 58 வயது மாலினி யோகராசா என்ற பெண், யாழ்ப்பாணத்தின் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வாழ்ந்து வருவதாலும், இவர் அவ்வப்போது யாழ்ப்பாணத்திற்கு வருவது வழக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வருகைகளில் ஒன்றாக அண்மையில் வந்த இவர், காலை வேளையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சில நேரத்திலேயே மரணமடைந்தார்.

நிகழ்வைத் தொடர்ந்து, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், உடற்கூறு பரிசோதனைகளுக்காக அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW