2.5 கோடி ரூபாய்க்கு அபூர்வ ’ராவண கல்’ விற்க முயன்ற இருவர் கைது
கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கல் 550 கிராம் நிறையுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'ராவண கல்' என்பது இலங்கையில் புராணக் கதைகளுடனும், சமீபத்திய புதையல் மோசடிகளுடனும் தொடர்புடைய ஒரு வகையான அபூர்வகல் அல்லது தொல்பொருளாகும். இது உள்ளூர் மக்களால் “சுலைமான் கல்” என்றும் அழைக்கப்படுகிறது.