மனோஜுக்கு பெண் பார்க்கும் விஜயா: ரோகிணியின் புதிய திட்டம் – ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் திருப்பம்
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதைக்களம் தற்போது பரபரப்பான திருப்பத்தை எடுத்து வருகிறது. மனோஜை விவாகரத்து வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்ட ரோகிணிக்கு எதிராக புதிய முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத்தில் புதிய மோதல்கள் உருவாகின்றன.
முன்னதாக ரோகிணியை டைவர்ஸ் வழக்கில் சிக்க வைக்க மனோஜ் தனது நண்பன் சந்தோஷை அனுப்பி, ரோகிணியிடம் காதல் முன்வைப்பது போல நடிக்கச் சொல்லி இருந்தார். ஆனால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. சந்தோஷை தனியாக வரவழைத்த ரோகிணி அவரை அடிக்க வைத்ததால், மனோஜின் திட்டம் தோல்வியடைந்தது.
அடுத்த நாள் மனோஜ் ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோகிணி வருகிறார். அவரைக் கண்டதும் சந்தோஷ் ஒளிந்துகொள்கிறார். இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடக்கிறது. நீ போட்ட திட்டத்தில் உன் நண்பனே அடிவாங்கியதாக ரோகிணி கிண்டல் செய்ய, அதற்கு பதிலடி கொடுக்கும் மனோஜ், சந்தோஷை ஆள் வைத்து அடித்ததாக குற்றம் சாட்டுகிறார்.
இதற்கு ரோகிணி கடுமையாக பதிலளித்து, தனது மனைவியை அவமானப்படுத்த ஒருவரை அனுப்பும் மனிதர் உலகத்தில் இருக்க முடியுமா என மனோஜை கேள்வி கேட்கிறார். பின்னர் அவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செக்கை மனோஜிடம் கொடுத்து, இது கல்யாண சீர்வரிசைக்கான அட்வான்ஸ் என கூறுகிறார். “நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
மறுபுறம், மீனாவின் பூக்கடைக்கு சென்ற முத்துவை சிலர் சந்திக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை காப்பாற்றியதற்காக அவருக்கு உதவி செய்ய விரும்புவதாக அந்த தம்பதி கூறுகிறார்கள். முத்து டிரைவராக இருப்பதை அறிந்த அவர்கள், ஒரு வேன் வாங்கி டூர் சேவை தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என ஆலோசனை வழங்குகிறார்கள். இதை முத்து ஏற்றுக்கொள்கிறார்.
இதற்கிடையில், விஜயா தனது தோழி பார்வதி வீட்டில் இருக்கும் போது மனோஜுக்காக பெண் பார்த்து வருவதாக சிலர் பேச வருகிறார்கள். அவர்களது மகளுக்கு 30 வயதாகும் எனக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த விஜயா, பெண்ணின் குடும்பத்திற்கு அதிக சொத்து இருப்பதாக அறிந்ததும் உடனே சம்மதம் தெரிவிக்கிறார். மேலும் தனது மகனுக்கு பெரிய குடும்பங்களில் இருந்து பல வரன்கள் வருவதாக பெருமையாக கூறுகிறார்.
இந்த தகவலை அறிந்த சிந்தாமணி, நேராக ரோகிணி வீட்டுக்கு சென்று மனோஜுக்கு பெண் பார்த்து வருகிறார்கள் என கூறுகிறார். இதைக் கேட்ட ரோகிணி அதிர்ச்சியடைந்து கோபத்தில் இருந்த கிளாஸை தரையில் வீசுகிறார். தனது மகளின் வாழ்க்கை சிதறப்போகிறது என ரோகிணியின் தாயும் கவலை தெரிவிக்கிறார்.
இதையடுத்து மனோஜுக்கு பெண் பார்க்கும் முயற்சியை ரோகிணி எப்படி தடுத்து நிறுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அடுத்த எபிசோடுகள் பரபரப்பாக நகரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.