குடியுரிமை விதிகளில் முக்கிய மாற்றம் செய்யும் கனடா: ஒரு நல்ல செய்தி
வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள்—அவர்களின் பிள்ளைகளும் வெளிநாட்டிலேயே பிறந்தால்—அந்த குழந்தைகளுக்கு கனேடிய குடியுரிமை தானாக வழங்கப்படாத நிலை தற்போது நடைமுறையில் உள்ளது.
வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள்—அவர்களின் பிள்ளைகளும் வெளிநாட்டிலேயே பிறந்தால்—அந்த குழந்தைகளுக்கு கனேடிய குடியுரிமை தானாக வழங்கப்படாத நிலை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களே “Lost Canadians” என்று அழைக்கப்படுகிறார்கள். 2009இல் அறிமுகமான இந்த விதி, வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள் தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறந்தால், அவர்கள் கனேடிய குடிமக்களாக ஏற்கப்படுவதில் பெரிய தடையாக இருந்தது.
ஆனால் 2023 டிசம்பரில் ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கியது. இதை கனடா அரசும் ஏற்றுக்கொண்டு மேல்முறையீடு செய்யாமல் விடுத்தது, ஏனெனில் இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அரசு ஒப்புக்கொண்டது.
தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான கனேடிய குடியுரிமை மசோதா—Bill C-3—மன்னரின் ஒப்புதலை பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தற்போது கனடா நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன், வெளிநாடுகளில் பிறந்த கனேடிய குடிமக்களின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளும், அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது தத்தெடுத்த பிள்ளைகளும் நேரடியாக கனேடிய குடியுரிமை பெற முடியும். இது பல குடும்பங்களுக்கு நிம்மதி தரும் நல்ல செய்தியாகக் கருதப்படுகிறது.
Editorial Staff