இளவரசி டயானா சென்ற இடத்திற்கு மகன் ஜோர்ஜை அழைத்து சென்ற இளவரசர் வில்லியம்!

Published on: 21 Dec 2025, 12:37 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனை அதே இடத்திற்கு அழைத்து வந்ததன் மூலம் வில்லியம் இந்தச் சேவைப் பணியைத் தொடர்கிறார்.

இளவரசி டயானா சென்ற இடத்திற்கு மகன் ஜோர்ஜை அழைத்து சென்ற இளவரசர் வில்லியம்!

வேல்ஸ் இளவரசர் வில்லியம், தனது 12 வயது மகன் இளவரசர் ஜோர்ஜை இலண்டனில் உள்ள 'தி பேசேஜ்' (The Passage) என்ற வீடற்றோர் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று, சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுத்தினார். வீடற்ற நிலை குறித்த சமூகப் பிரச்சினைகளை ஜோர்ஜிற்கு கற்பிக்கவும், அதைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் காட்டவும் அவர் தனது மகனை அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மத்திய இலண்டனில் உள்ள இந்தத் தொண்டு நிறுவனத்துடன் வில்லியத்தின் குடும்பத்திற்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு உள்ளது. 1993-ஆம் ஆண்டு, வில்லியத்தின் தாயார் இளவரசி டயானா, வில்லியத்தை சிறுவனாக இருந்தபோது முதன்முதலில் இங்கு அழைத்து வந்திருந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனை அதே இடத்திற்கு அழைத்து வந்ததன் மூலம் வில்லியம் இந்தச் சேவைப் பணியைத் தொடர்கிறார்.

 1993 டிசம்பரில் டயானா மற்றும் வில்லியம் கையெழுத்திட்ட அதே வருகையாளர் புத்தகப் பக்கத்தில் (visitors' book), இப்போது இளவரசர் ஜோர்ஜும் கையெழுத்திட்டார். "இது எனது அம்மாவின் கையெழுத்து. அவர் என்னை முதன்முதலில் இங்குதான் அழைத்து வந்தார்" என்று ஜோர்ஜிடம் வில்லியம் கூறியது ஒரு அழகான தருணமாக அமைந்தது.

 தந்தை - மகன் இருவரும் சேர்ந்து 150 பேருக்கு கிறிஸ்துமஸ் மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வில்லியம் முட்டைக்கோஸ் (sprouts) நறுக்கும் பணியிலும், ஜோர்ஜ் யார்க்ஷயர் புடிங்  (Yorkshire puddings) தயாரிக்கும் பணியிலும் உதவினர்.

ஜோர்ஜ் தனது தந்தையைப் போலவே மிகவும் ஆர்வமாகப் பணியாற்றியதாகவும், சேவைகளைப் பெறுபவர்களுடன் பேசுவதில் அதிக அக்கறை காட்டினார் என்றும் அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மிக் கிளார்க் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW