தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்: தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் – தாய் மற்றும் கள்ளக்காதலன் விளக்கமறியலில்

அம்பாறை மாவட்டம் கல்முனை நற்பிட்டிமுனைப் பகுதியில், 14 வயது சிறுமியை அவரது தாயும் தாயின் கள்ளக்காதலனும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்: தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் – தாய் மற்றும் கள்ளக்காதலன் விளக்கமறியலில்

பதின்ம வயதான சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் கடந்த 2026 மார்ச் 24 ஆம் தேதி இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சுமார் மூன்று மாதங்களாகத் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான கள்ளக்காதலனும், சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

50 வயதுடைய சந்தேக நபர், சமூக வலைத்தளங்கள் ஊடாகத் திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். தம்புள்ளை - கலேவலைப் பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பெண் தனது 14 வயது மகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கல்முனை - நற்பிட்டிமுனைப் பகுதிக்கு வந்து கள்ளக்காதலனைச் சந்தித்துள்ளார். தாயும் மகளும் தங்குவதற்காகக் கிராம உத்தியோகத்தரின் உதவி ஊடாக வாடகைக்கு வீடு பெறப்பட்டு, அங்கு அவர்கள் தங்கியிருந்தனர். இதன்போது, தாயுடன் தங்கியிருந்த சிறுமியைக் குறித்த நபர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதற்குத் தாய் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாகியிருந்த 50 வயதான பிரதான சந்தேக நபரை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் வைத்துக் கடந்த மூன்றாம் திகதி கைது செய்ததுடன், சிறுமியின் தாயையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸாரும், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர