மாணவனை கரப்பான்பூச்சி சாப்பிடச் சொன்ன ஆசிரியர் மீது விசாரணை

Published on: 20 Dec 2025, 06:46 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சம்பவம் நேர்ந்த போது மாணவர் பள்ளியின் பெண்கள் கழிவறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

மாணவனை கரப்பான்பூச்சி சாப்பிடச் சொன்ன ஆசிரியர் மீது விசாரணை

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில், ஒரு ஆசிரியர், மாணவனை கரப்பான்பூச்சி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் ஏற்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்களிடமிருந்து புகார் வந்துள்ளதாக மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் டிசம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு, டிசம்பர் 15ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார். சம்பவம் நேர்ந்த போது மாணவர் பள்ளியின் பெண்கள் கழிவறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கும் தொடர்பாக தனித்தனி விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகாரிகள் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து, கல்வியியல் நெறிமுறைகளுக்கு மீறான எந்த செயலுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பின்னணியையும், சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்பாடுகளையும் பரிசோதித்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என மணிலா கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW