கட்டாரின் முன்னாள் அமீர் மறைவு: தோஹா சென்றடைந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் இரங்கல்!

Published on: 16 Jul 2026, 09:31 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தோஹா சென்று தற்போதைய அமீரை நேரில் சந்தித்தார்.

கட்டாரின் முன்னாள் அமீர் மறைவு: தோஹா சென்றடைந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் இரங்கல்!

கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானியின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காக, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 15 அன்று கட்டார் நாட்டின் தோஹாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தோஹாவில் அமைந்துள்ள லுஸைல் (Lusail) அரண்மனைக்குச் சென்ற பிரதமரை, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் கலீபா பின் ஹமட் பின் கலீபா அல்-தானி முறைப்படி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்-தானியை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கத்தார் நாட்டின் பிரதி அமீர் ஷேக் அப்துல்லா பின் ஹமட் அல்-தானி, பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி, சூரா சபையின் சபாநாயகர் ஹசன் பின் அப்துல்லா அல் கானிம் உள்ளிட்ட அரச குடும்பத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும், காலஞ்சென்ற முன்னாள் அமீரின் புதல்வர்களும் கலந்துகொண்டனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW