அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி முயற்சி!

Published on: 18 Jul 2026, 07:59 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளர்களை குறிவைத்து போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி முயற்சிகள் நடைபெறுவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கித் தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி முயற்சி!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளர்களை குறிவைத்து போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அஸ்வெசும பயனாளர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என பொய்யாக அறிமுகப்படுத்தி, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பிற நிதி தொடர்பான தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், இதுபோன்ற அழைப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தொலைபேசி மூலமாக தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP போன்ற தகவல்களை எந்த சூழலிலும் பகிர வேண்டாம் என பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலி அழைப்புகள் அல்லது மோசடி முயற்சிகளை எதிர்கொண்டால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறும், சம்பவத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வருமாறும் நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW