புதுடெல்லியில் புதுமணப்பெண் சடலமாக மீட்பு: கணவர் தலைமறைவு

புதுடெல்லியின் நபி கரீம் பகுதியில் புதுமணப்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், வரதட்சணை கோணத்திலும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லியில் புதுமணப்பெண் சடலமாக மீட்பு: கணவர் தலைமறைவு

New Delhi நகரில் புதுமணப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக வீட்டு உரிமையாளர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் Nabi Karim பகுதியில் உள்ள வீட்டிற்கு விரைந்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கட்டிலின் கீழ் துணிமணிகள் வைக்கும் பெட்டிக்குள் சுமார் 28 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆரம்ப விசாரணையில், கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட தம்பதியர் அந்த வீட்டில் குடியேறியிருந்தது கண்டறியப்பட்டது. கணவர் Bihar மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, கணவர் வீட்டில் இல்லாததுடன் அவர் தலைமறைவாகியிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். அவரை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த மரணத்தின் பின்னணியில் வரதட்சணை தொடர்பான பிரச்சினை இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், இரு குடும்பத்தினரிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர