காதலியை கொலைசெய்து மறைத்த காதலன்- 9 மாதங்கள் காணாமல் போன இளம்பெண் உடல் காட்டில் மீட்பு
ஜார்கண்ட் மாநிலம் போகரோ மாவட்டத்தில் 9 மாதங்களாக காணாமல் போன 18 வயது இளம்பெண் புஷ்பா குமாரி கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது காதலன் தினேஷ் மகாதோ கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, காட்டுப் பகுதியில் இருந்து அவரது எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிந்தாராஜோரா கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா குமாரி காணாமல் போன வழக்கு நீண்ட நாட்களாக மர்மமாக இருந்த நிலையில், சாகுலியா பஞ்சாயத்தில் உள்ள மதுதாண்ட் வனப்பகுதியில் இருந்து அவரது எலும்புக்கூடு, உடை, முடி, எலும்புத் துண்டுகள் மற்றும் கொலை ஆயுதம் ஆகியவை சிறப்பு விசாரணைக் குழுவால் (SIT) மீட்கப்பட்டன.
போலீசாரின் தகவலின்படி, புஷ்பா மற்றும் தினேஷ் மகாதோ மூன்று ஆண்டுகளாக உறவில் இருந்ததாகவும், திருமணம் செய்யுமாறு அவர் அழுத்தம் கொடுத்ததால் மனஅழுத்தத்தில் இருந்ததாகக் கூறி, கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவ நாளில் கல்லூரிக்கு சென்ற புஷ்பாவை தினேஷ் சந்தித்து, பேசுவதாக கூறி சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
கொலைக்குப் பிறகு உடலை புதர்களில் மறைத்து, ரத்தக்கறை கொண்ட கத்தியை சாலையோரத்தில் வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டபோது போலீசாரில் சிலர் வழக்கை பலவீனப்படுத்த முயன்றதும், குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகங்கள் எழுந்ததும் தெரியவந்துள்ளது. இதன் பேரில் 28 போலீஸ் அதிகாரிகள், அதில் ஒரு காவல் நிலைய அதிகாரியும் உட்பட, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.