வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சில நேரங்களில் வக்ர நிலையில் பின்னோக்கிப் பயணம் செய்து, பின்னர் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்கிறது. இந்த மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த 100 நாட்களுக்கு மேலாக வக்ர நிலையில் இருந்த குரு பகவான் மார்ச் 11ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் நேர்கதியில் பயணம் தொடங்கியுள்ளார். இதனால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஜூன் 1ஆம் தேதி குரு கடக ராசியில் உச்ச நிலையை அடைய உள்ளதால், அதற்கு முன்பான காலம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு முயற்சி ஸ்தானத்தில் குரு நேர்கதியில் செல்ல தொடங்குவதால் கடந்த மாதங்களில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருந்த குழப்பங்கள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு நேர்கதியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே குரு நேர்கதியில் பயணம் செய்வதால் ஆளுமைத் திறன் உயரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நேரம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகளில் கவனம் தேவை. ஜூன் மாதம் வரை மன அழுத்தம் அதிகரிக்கலாம். பண விஷயங்களில் அவசரம் தவிர்ப்பது நல்லது.
சிம்ம ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் வருமானம் உயரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் குரு நேர்கதியில் இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கலாம். வேலைகள் தாமதமாக முடியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் குரு இருப்பதால் அதிர்ஷ்டம் கூடும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு நேர்கதியில் செல்லுவதால் தைரியம் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் குரு இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் குரு இருப்பதால் கடன் பிரச்சினைகள் குறையும். நோய்கள் நீங்கும். வேலையில் இருந்த தடைகள் அகலும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் பணவரவு சீராகும். சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மீன ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானத்தில் குரு இருப்பதால் வீடு, வாகனம் போன்ற யோகங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சொத்து விஷயங்களில் கவனம் தேவை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள பலன்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம். ஜோதிட ஆலோசனை தேவையெனில் அனுபவமுள்ள ஜோதிடரை அணுகுவது நல்லது.