மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது – 30 தொழிலாளர்கள் பலி; பலர் படுகாயம்

Published on: 20 Aug 2026, 08:50 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது – 30 தொழிலாளர்கள் பலி; பலர் படுகாயம்

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள நானா-மாம்பேரே மாகாணத்தின் அப்பா பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த ஒரு தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்த கோர விபத்தில், சுமார் 30 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது எதிர்பாராதவிதமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததே இந்த பரிதாபத்திற்குக் காரணமாயிற்று. விபத்து நடந்த இடத்திலேயே 30 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினரும் உள்ளூர் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாத பாரம்பரிய சுரங்க முறையே இந்த விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்ட, உரிமமில்லாத இத்தகைய சுரங்க விபத்துகள் இந்நாட்டில் அடிக்கடி நிகழ்வது கவலைக்குரியதாக அமைந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW