மாடல் அழகி கொலை: தப்பியோடிய ஜிம் பயிற்சியாளர் அதிரடியாக கைது!
கைது செய்யப்பட்ட இம்ரான், டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த முஸ்கான் எனும் 21 வயது மாடலை புதன்கிழமை கத்தியால் பலமுறை குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியவர் .
மேற்கு டெல்லியில் 21 வயது இளம் மாடலை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான ஜிம் பயிற்சியாளர் பொலிசாருடனான துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இம்ரான், டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த முஸ்கான் எனும் 21 வயது மாடலை புதன்கிழமை கத்தியால் பலமுறை குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியவர் .
இவர்கள் ஒன்றரை வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததாகவும், முஸ்கான் வேறு ஒருவருடன் பேசியதற்காக கோபமடைந்த இம்ரான் இந்தக் கொலையைச் செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர் .
கொலை நடந்த பிறகு தலைமறைவான இம்ரானைப் பிடிக்க பொலிசார் பல குழுக்களை அமைத்தனர். வியாழக்கிழமை இரவு, ராஜோரி கார்டன் பகுதியில் அவர் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்த பொலிசார், அவரைச் சுற்றி வளைத்தனர்.
அப்போது, தன்னைக் கைது செய்ய வந்த பொலிசாரின் மீது இம்ரான் நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தினார் . இதற்கு பதிலடியாக பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இம்ரானின் இரு கால்களிலும் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
இம்ரானின் கைது மூலம் தலைமறைவு முடிவுக்கு வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த விசாரணையை பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் .