ப்ரோமோஷன்களுக்கு வருவது எனக்கு அவ்வளவாக வராது - 'டாக்சிக்' விழாவில் நயன்தாரா பேச்சு!
நடிகை நயன்தாரா, தான் ஏன் தனது பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதற்கான காரணத்தை 'டாக்சிக்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா வழக்கமாக தாம் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று பரவலாக அறியப்படும் விஷயம். இந்த வழக்கத்தை அவர் பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நிலையில், தற்போது யாஷ் உடன் இணைந்து நடித்துள்ள 'டாக்சிக்' படத்திற்காக மட்டும் அந்த வழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற 'டாக்சிக்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்துகொண்டு பேசியபோது, தான் ஏன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பதற்கான காரணத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது: "ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அது எனக்கு அவ்வளவாக பிடித்தமான ஒன்றல்ல. அதனால் தான் நான் அதில் இருந்து விலகி இருந்தேன். இருப்பினும், இந்த முறை யாஷ் எனக்கு போன் செய்து அழைத்தார். அவரது அழைப்பை மறுக்க முடியாமல் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் இந்த வெளிப்படையான பேச்சு, ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 'டாக்சிக்' படத்தில் யாஷ் மற்றும் நயன்தாரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.