ரூ.5 கோடி பெராரி காரில் விளையாடிய சிறுவர்கள்... ₹95 லட்சம் இழப்பீடு கோரி பெற்றோர் மீது வழக்கு
சீனாவில் ரூ.5.04 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் விளையாடிய சிறுவர்கள் ஏற்படுத்திய சேதத்திற்காக ₹95 லட்சம் இழப்பீடு கோரி, அவர்களின் பெற்றோர் மீது கார் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீனாவில் ரூ.5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு கார் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் விளையாடிய சிறுவர்களால் ஏற்பட்ட சேதத்துக்காக ₹95 லட்சம் இழப்பீடு கோரி, அவர்களின் பெற்றோர் மீது கார் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
China நாட்டின் Yunnan மாகாணத்தில் உள்ள Kunming நகரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற சொகுசு காரின் இந்திய மதிப்பு சுமார் ரூ.5.04 கோடி என கூறப்படுகிறது.
கார் உரிமையாளர் வெளியூருக்குச் சென்றிருந்த நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் அந்தக் காரின் மீது ஏறி விளையாடியுள்ளனர். இதனால் காரின் முன்பகுதி, மேற்கூரை, கண்ணாடிகள், பின்புற விளக்குகள் உள்ளிட்ட பல இடங்களில் கீறல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், முன்புறத் தடுப்புப் பகுதியும் சேதமடைந்துள்ளது.
கண்காணிப்பு காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுவர்கள் காரின் மீது ஏறி விளையாடியதும், மூங்கில் கம்புகளால் காரைத் தட்டியதும் பதிவாகியிருந்தது.
சேதமடைந்த காரை அசல் உதிரிபாகங்களைக் கொண்டு பழுதுபார்க்க சுமார் ஒரு லட்சம் யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹95 லட்சம் செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கார் உரிமையாளர் சிறுவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், முழு இழப்பீட்டை வழங்க மறுத்த பெற்றோர், சுமார் 5,000 யுவான் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கார் உரிமையாளர், முழு பழுதுபார்ப்பு செலவையும் பெற்றோரிடமிருந்து பெற்றுத்தரக் கோரி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.