மீண்டும் பலித்த பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு ? அடுத்து என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா?
பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்காவின் 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 2026-ல் உலகப் போர், கடும் நிலநடுக்கங்கள், வேற்றுலகத் தொடர்பு உள்ளிட்ட அவரது முக்கிய கணிப்புகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா, "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர். 1996-ம் ஆண்டு மறைந்துபோன இவரது 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள், சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வெனிசுலாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததுடன், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பாபா வங்காவின் கணிப்புகளுடன் பொருத்தி போவதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வதந்தி பாபா வங்காவின் உண்மையான கணிப்புகள் பக்கம் உலகின் கவனத்தை திருப்பியுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான அவரது தீர்க்கதரிசனங்களில் முதன்மையானது இயற்கைப் பேரழிவுகள் தொடர்பானது. பூமியின் மேற்பரப்பில் 7 முதல் 8 சதவீத பகுதிகள் கடும் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் புவி வெப்பமடைவால் ஏற்படும் பாதிப்புகளால் சேதமடையும் என்று அவர் கணித்திருந்தார்.
ஏற்கனவே ஜப்பான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களும், தற்போது வெனிசுலா தொடர்பாக வரும் வதந்திகளும் இந்தக் கணிப்பை நிறைவேற வைப்பது போன்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகும் என்றும், கடுமையான வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்றும் அவர் கூறியதாக கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாபா வங்காவின் மிகவும் அதிர்ச்சியூட்டும் கணிப்பு மூன்றாம் உலகப் போர் தொடர்பானது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று உலகப் பெரும் வல்லரசுகளும் இணைந்த மோதல் ஒன்று 2026-ம் ஆண்டில் ஆரம்பமாகும் என்றும், இது தைவான் விவகாரம், உக்ரைன்-ரஷ்யா பதற்றம் போன்ற காரணிகளால் தூண்டப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்த நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் நெருக்கடிகளும், படையெடுப்பு அச்சுறுத்தல்களும் இந்தக் கணிப்புக்கு புத்துயிர் அளித்துள்ளன. எனினும், இந்தப் போர் மனிதகுலத்தின் முழுமையான அழிவில் முடியாது; மாறாக, ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் என்றும் அவர் நம்பினார்.
மிகவும் வியப்பூட்டும் வகையில், 2026-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனிதகுலம் முதன்முறையாக வேற்றுலக உயிரினங்களுடன் (Aliens) தொடர்பு கொள்ளப்போவதாகவும் பாபா வங்கா கணித்துள்ளார். இது விண்வெளி ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் வேற்று கிரகங்களில் கண்டறியப்படும் புதிய தடயங்கள் காரணமாக இந்த கணிப்பு மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாபா வங்காவின் கணிப்புகளுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும், உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இயற்கை சீற்றங்களும், புவிசார் அரசியல் நெருக்கடிகளும் மக்களின் மனதில் இந்த தீர்க்கதரிசனங்களை உண்மையாக்கும் பயத்தையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளன.
வெனிசுலா நிலநடுக்கம் உண்மையாகவே இருந்தாலும், பாபா வங்காவின் ஏனைய கணிப்புகள் உலகம் முழுவதும் விவாதத்திற்குரிய ஒரு பொருளாகவே உள்ளன. இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு நிறைவேறும் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.