சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு.. 4 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமையால் மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழப்பு.. 4 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre) தெரிவித்துள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இந்த உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று (13) முற்பகல் 10.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 17 பேர் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பலத்த மழை மற்றும் அனர்த்த நிலைமையால் 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre) தெரிவித்துள்ளது.

மக்கள் அவதானமாக இருக்குமாறும், அனர்த்த எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர