அஸ்வெசும ஜூன் மாத இரண்டாம் கட்ட கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நலன்புரி நன்மைகள் சபை, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் 2026 ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள் இன்று (23) முதல் பயனாளிகளுக்குக் கிடைக்கப்பெறும் என அறிவித்துள்ளது.
2026 ஜூன் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள் இன்று (23) முதல் பயனாளிகளுக்குக் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவு, தகுதியுடைய 270,025 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, மொத்தம் 3,287,163,750 ரூபாய் இன்றைய தினம் (23) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.
இந்த நிதி வழங்கல், நாட்டின் நலன்புரித் திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக அமைவதுடன், தகுதியான குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.