UK-வில் பிறக்கும் குழந்தைகளும் பெற்றோர்களுடன் நாடு கடத்தப்படுவார்கள் உட்படுவார்கள் – கடுமையாகும் அகதி கொள்கை

புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பெற்றோரின் UK-வில் பிறக்கும் குழந்தைகளும் நாடு கடத்தலுக்கு உட்படுவார்கள் என்று உள்துறை அமைச்சரான அலெக்ஸ் நோரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Published on: 05 Dec 2025, 03:01 pm
47

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
UK-வில் பிறக்கும் குழந்தைகளும் பெற்றோர்களுடன் நாடு கடத்தப்படுவார்கள் உட்படுவார்கள் – கடுமையாகும் அகதி கொள்கை

புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பெற்றோரின் UK-வில் பிறக்கும் குழந்தைகளும் நாடு கடத்தலுக்கு உட்படுவார்கள் என்று உள்துறை அமைச்சரான அலெக்ஸ் நோரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அகதிகள் துறை அமைச்சராக உள்ள நோரிஸ், நாட்டில் தங்குவதற்கான சட்ட அனுமதி இல்லாதவர்களின் அனைவரும் UK-வை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்று தெரிவித்தார். அதிகாரிகள் உண்மையான அகதிகளாகத் தகுதி பெறவில்லை என்று கருதும் குடும்பங்கள் மீது கட்டாய வெளியேற்ற நடவடிக்கைகளை அரசு மேலும் விரிவாக்க திட்டமிட்டு வருகிறது.

UK-வில் பிறந்த குழந்தைகளும் இந்த நடவடிக்கையில் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அவர் கூறினார்:

“ஆம், குடியேற்றச் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படும். அந்த சூழ்நிலைகளில், முழு குடும்பமும் ஒன்றாக வெளியேற்றப்படும்.”

அதே நேரத்தில், குழந்தைகள் உட்படப் குடும்பங்களை தன்னார்வமாகவும் குறைந்த தடைகளைச் சந்திக்காத முறையிலும் நாடு கடத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் குடியேற்றக் கொள்கையில் தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்தை அவர் வலியுறுத்தினார். 2024 ஜூலை மாதத்திலிருந்து 50,000 பேரை நாடு கடத்தியது – இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த எண்ணிக்கை என்பதையும் தெரிவித்தார். தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டாய வெளியேற்ற நடவடிக்கைகள் 24% உயர்ந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ஆக்ஸ்ஃபோர்டுக்கு அருகில் உள்ள கேம்ப்ஸ்ஃபீல்ட் ஹவுஸில் புதிய குடியேற்ற தடுப்பு மற்றும் வெளியேற்ற மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது UK-யின் எட்டாவது தடுப்பு மையமாகும்.

இந்த மையம் தற்போதுள்ள 2,400 தடுப்பு இடங்களுக்கு மேலாக 160 கூடுதல் படுக்கைகள் வழங்குகிறது; பின்னர் இதை 240 இடங்களாக விரிவாக்கும் திட்டமும் உள்ளது.

இங்குப் புதியதாக தடுத்து வைக்கப்படுவோர், சிறிய படகுகள் வழியாக சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், வெளிநாட்டு குற்றவாளிகள், சட்டவிரோதமாக வேலை செய்த குடியேற்ற விதிமுறைகள் மீறியவர்களாக இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW