பெண்கள் மாற்று அறையில் ரகசிய கேமரா: கடை உரிமையாளர் கைது

பெண்கள் மாற்று அறையில் பதுங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை தொடங்கியது.

Published on: 09 Dec 2025, 04:08 pm
44

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
பெண்கள் மாற்று அறையில் ரகசிய கேமரா: கடை உரிமையாளர் கைது

கொழும்பு மஹரகம — தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில், பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மாற்று அறையில் பதுங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை தொடங்கியது.

விசாரணையின்போது, கடை உரிமையாளரின் மொபைல் போனில் பெண்கள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோர் ஆடை மாற்றும் போது எடுத்த காணொளிகள் இருந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இக்காணொளிகள் சமூக ஊடகங்களுக்கு பகிரப்பட்டனவா அல்லது பிறருக்கு வழங்கப்பட்டனவா என்பதைப் பற்றி அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்துக்கான விசாரணை தலங்கம காவல்துறையால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW