சீரற்ற காலநிலையிலும் இலங்கைக்கு அதிகரித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

Published on: 09 Dec 2025, 04:29 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஞாயிற்றுக்கிழமை (07) நிலவரப்படி மொத்தமாக 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 8,989 பேர்.

சீரற்ற காலநிலையிலும் இலங்கைக்கு அதிகரித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை இருந்தபோதிலும், இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000–ஐ கடந்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை (07) நிலவரப்படி மொத்தமாக 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 8,989 பேர்.

மேலும் ரஷ்யா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் முக்கியமான அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW