சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நாள்தோறும் மாற்றமடைந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருவதால், இந்தியாவில் தங்கம் விலை உயர்வாகவே காணப்படுகிறது.
வாரத்தின் தொடக்க நாளில் விலை குறைவு நகை பிரியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பல நகைக் கடைகளில் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து பதிவானது.