யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது சட்ட வைத்திய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு கைதிகளும் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.