சனி பெயர்ச்சி பலன்கள்: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் பெருகும் – பொற்காலம் தொடங்குகிறது

ஜூலை 2 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குப் பெயர்ச்சியடைகிறார். இந்த மாற்றம் ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மேம்பாடு, தொழில் முன்னேற்றம், குடும்பப் பிரச்சினைகள் தீர்வு, மற்றும் அதிர்ஷ்டம் பெருக வழிவகுக்கும்.
சனி பெயர்ச்சி பலன்கள்: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் பெருகும் – பொற்காலம் தொடங்குகிறது

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார். சனியின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் ஜூலை 2 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைகிறார். குறிப்பாக, ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் இந்தப் பெயர்ச்சி நிகழ்கிறது. இது சில ராசிகளுக்கு மிகவும் நேர்மறையான விளைவுகளைத் தரும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தச் சனி பெயர்ச்சி சுப பலன்களை வழங்கும். அவர்கள் எதிர்கொண்டு வந்த சிறு சிறு பிரச்சினைகள் தீரும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க இது சிறந்த காலமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தனிப்பட்ட பிரச்சினைகளும் விடுபடும்.

மிதுன ராசிக்காரர்கள் சனிப் பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் உயரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத பலன்களைப் பெறுவீர்கள். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பம் மற்றும் பணியிடப் பிரச்சினைகள் தீரும். கடின உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வீடு, சொத்து, நகை வாங்கும் யோகமும் உண்டு.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தச் சனி பெயர்ச்சியால் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். நிதி நிலைமை மேம்படும். வருமானம் உயரும். பணியில் இருப்பவர்களுக்குத் திடீர் வளர்ச்சியும், பணிச்சுமை குறைவும் ஏற்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முதலீடுகளில் எதிர்பாராத லாபமும், நிதி இழப்புகளிலிருந்து விடுபடுதலும் நிகழும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். திருமணத் தடைகளும் நீங்கும்.

மகர ராசிக்காரர்களுக்கும் சனி பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவார்கள். புதிய தொழில் தொடங்கச் சிறந்த காலமாகும். துணையிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். தங்கம், நகை வாங்கும் யோகம் உண்டு. திருமணத் தடைகள் நீங்கும். மாணவர்களின் படிப்பு முன்னேறும்.

சனியின் ஆசீர்வாதங்களைப் பெற, சனிக்கிழமைகளில் சனி பகவானைத் தரிசிக்க வேண்டும். கடுகு எண்ணெய், உளுந்து, கருப்புத் துணிகள், காலணிகள் ஆகியவற்றை சனிக்கிழமையன்று தானமாக வழங்குவது நல்லது. அன்றைய தினம் அனுமன் கோயிலுக்குச் சென்று அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்ய வேண்டும். தினமும் சிவலிங்கத்திற்கு நீர் அபிஷேகம் செய்வதும் சனியின் தயவைப் பெறத்தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

சமூக வலைத்தளங்களில் பின்தொடர