டித்வா புயலால் கடுமையாக தாக்கமடைந்த இலங்கைக்கு சர்வதேச சமூகம் பல்வேறு வடிவங்களில் அவசர உதவிகளை வழங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல நாடுகள் தங்களது நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
டித்வா புயல் இலங்கையில் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இன்று மாலை 5 மணி வரையிலான கணக்கில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.