நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இறுதி போட்டியாளர்களுடன் உரையாடும் பகுதி ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த சீசனின் காதல் புறாக்களாக உருவெடுத்துள்ள பார்வதி மற்றும் கமருதீன், கடந்த வாரம் மைக்கை மறைத்துப் பேசியதற்காக ஹோஸ்ட் விஜய் சேதுபதியிடம் கடுமையான எச்சரிக்கை பெற்றிருந்தனர். இருப்பினும், இந்த வாரம் அவர்கள் மீண்டும் பிக்பாஸ் விதிகளை மீறி விட்டனர்.