உலகப்புகழ் பெற்ற பல்கேரிய பெண்மணி பாபா வாங்கா, மறைந்த பின்னரும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளுக்காக இன்றும் மக்களிடையே அதிகம் பேசப்படுபவர்.
‘பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என அழைக்கப்படும், பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, உலக வரலாற்றை மாற்றிய பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறார்.
1911 அக்டோபர் 3ஆம் தேதி பிறந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே தனக்கு எதிர்காலத்தை காணும் சக்தி இருப்பதாக தெரிவித்தார். உலக நிகழ்வுகள் மட்டுமல்லாமல், தனிநபர் வாழ்க்கை மற்றும் ராசிகளின் எதிர்காலம் குறித்த அவரது கணிப்புகளும் இன்று வரை பலரால் ஆர்வத்துடன் பின்தொடரப்படுகின்றன.